கெம்மநாயக்கன்பாளையம் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வடமாநிலத்தவர் கைது

கோவை அன்னூர் காவல்துறையினர் கெம்மநாயக்கன்பாளையம் அருகே வாகன சோதனையின் போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய காவல்துறையினர் கெம்மநாயக்கன்பாளையம் அருகே இன்று (ஜூலை 23) வாகன சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகாதேவ் சௌத்ரி என்பவரது மகன் ரவிசங்கர் சவுத்ரி (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காவல்துறையினர் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட ரவிசங்கர் சவுத்ரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...