உக்கடம் மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோரிக்கை

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டை அகற்றி, அந்த இடத்தை குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவிடம் ஜூலை 23 அன்று, கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி அந்த இடத்தை குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் உக்கடம் சி.எம்.சி காலனி பகுதியில் பல வருடங்களாக தூய்மை பணியாளர்கள் வசித்து வந்தனர். 2018ஆம் ஆண்டு, உக்கடம் மேம்பாலம் அமைக்க இடம் தேவைப்பட்டதால், சி.எம்.சி காலனி பகுதி மக்களிடம் அப்பகுதியில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி, 18 மாதங்களில் 520 வீடுகள் கட்டித்தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதன்படி, அம்மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு, கோவை புல்லுக்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும், மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தாத காரணத்தால், அப்பகுதி மக்கள் வீடின்றி அவதியுறுகின்றனர்.

இந்நிலையில், வானதி சீனிவாசன் எம்எல்ஏ, "இவ்விஷயத்தில் தங்களது மேலான கவனம் கொண்டு, விரைந்து மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி, குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...