உக்கடம் மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோரிக்கை

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டை அகற்றி, அந்த இடத்தை குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவிடம் ஜூலை 23 அன்று, கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி அந்த இடத்தை குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் உக்கடம் சி.எம்.சி காலனி பகுதியில் பல வருடங்களாக தூய்மை பணியாளர்கள் வசித்து வந்தனர். 2018ஆம் ஆண்டு, உக்கடம் மேம்பாலம் அமைக்க இடம் தேவைப்பட்டதால், சி.எம்.சி காலனி பகுதி மக்களிடம் அப்பகுதியில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி, 18 மாதங்களில் 520 வீடுகள் கட்டித்தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதன்படி, அம்மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு, கோவை புல்லுக்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும், மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தாத காரணத்தால், அப்பகுதி மக்கள் வீடின்றி அவதியுறுகின்றனர்.

இந்நிலையில், வானதி சீனிவாசன் எம்எல்ஏ, "இவ்விஷயத்தில் தங்களது மேலான கவனம் கொண்டு, விரைந்து மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி, குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...