மத்திய அரசு பட்ஜெட்: திருப்பூர் தொழில்துறையினர் ஏமாற்றம்

திருப்பூரில் மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து தொழில்துறையினர் கருத்து. சிறு, குறு நிறுவனங்களுக்கு போதுமான திட்டங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு. ஏற்றுமதி கடன் மானியம் குறைப்பு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவிப்பு.


திருப்பூர்: மத்திய அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து திருப்பூர் தொழில்துறையினர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். பெரும்பாலான தொழில் அமைப்புகள் இந்த பட்ஜெட் சிறு, குறு நிறுவனங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளன.



திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், "இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிறப்பாக உள்ளது. ஆனால் 90 சதவீதம் உள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு போதுமான அளவு திட்டங்கள் இல்லை. எங்கள் தேவைகள் பூர்த்தி ஆகவில்லை," என்றார். மேலும் அவர், "வங்கிகள் நல்ல நிலையில் இயங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் வழங்குவார்கள் என்ற நிலையில், நலிவடைந்த நிறுவனங்கள் கடன் உதவி பெற திட்டங்கள் இல்லை. வங்கதேச ஆடை இறக்குமதி தடை நிறைவேற்றப்படவில்லை," என்று குறிப்பிட்டார்.



திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் KM.சுப்பிரமணியம் கருத்து தெரிவிக்கையில், "தனிநபர் வரி குறைப்பு சிறு தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான அம்சமாக உள்ளது. ஆனால் ஏற்றுமதி கடன் மானியம் 5 சதவீதம் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தோம், ஆனால் 3 சதவீதமாக உள்ளது," என்றார். அவர் மேலும், "புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகை அறிவிப்பு சிறப்பானது. தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதி குறித்த அறிவிப்பு எங்களது நீண்ட நாள் கோரிக்கை. இது குறித்து முழுமையான விவரங்கள் அறிந்து உடனடியாக திருப்பூரில் தொழிலாளர் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும்," என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக, திருப்பூர் தொழில்துறையினர் இந்த பட்ஜெட் அறிவிப்புகளில் சில நேர்மறையான அம்சங்களை பாராட்டினாலும், பெரும்பாலும் சிறு, குறு நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்ற ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...