மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயரும் அபாயம்: எஸ்.பி. வேலுமணி எச்சரிக்கை

கோவையில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயரும் அபாயம் உள்ளதாக தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்துள்ளார்.



Coimbatore:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள திருவள்ளுவர் திடலில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், நியாய விலைக் கடைகளில் பாமாயில், பருப்பு போன்ற பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, "அதிமுக ஆட்சியில் கொரோனா காலகட்டத்திலும், வருவாய் இழப்பு ஏற்பட்ட நிலையிலும் மின் கட்டணம், சொத்து வரி உயர்த்தப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது," என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர், "கோவை மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மின் கட்டண உயர்வால் வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

நியாய விலைக் கடைகள் குறித்தும் எஸ்.பி. வேலுமணி கருத்து தெரிவித்தார். "நியாய விலைக் கடைகளில் பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தரமில்லாமல் குறைத்து வழங்கப்படுகின்றன. அனைத்து பொருட்களும் முழுமையாக வழங்கப்பட வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...