வன உயிரினங்கள் உயிரிழப்பை தடுக்க மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வெடிபொருள், மின்சாரம் காரணமாக வன உயிரினங்கள் உயிரிழப்பதை தடுக்க மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வன உயிரினங்கள் வெடிபொருள்/அவுட்டுக்காய் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நிகழ்வுகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் ஜூலை 22 அன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் வனக்களப்பணியாளர்கள் மற்றும் மின்வாரிய பணியாளர்களுடன் இணைந்து தொடர்ச்சியாக வனங்களை ஒட்டி உள்ள பகுதியில் கூட்டுத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தணிக்கையின் போது தாழ்வாக உள்ள மின் கம்பிகள் மற்றும் சாய்வான சேதமடைந்த மின்கம்பிகள் கண்டறியப்பட்டு உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளன.



கடந்த ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2024 வரை சுமார் 2000 எண்ணிக்கையிலான தாழ்வான மின் கம்பிகள் மற்றும் சேதமடைந்த சாய்வான மின்கம்பங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளன. மேலும், முற்றிலும் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனங்களை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் உள்ள மின்வேலிகளையும் மின்வாரிய பணியாளர்களுடன் ஆய்வு செய்து, அனுமதிக்கப்பட்ட அளவிலான மின்னழுத்தம் பயன்படுத்தப்படுகிறதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.



கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அவுட்டுக்காய் (நாட்டு வெடி) பயன்படுத்தி வனஉயிரினங்கள் வேட்டையாடுவதைத் தவிர்க்க காவல் துறையுடன் இணைந்து தொடர் களத்தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஓராண்டில் அவுட்டுக்காய் பயன்படுத்தி வேட்டையாடிய குற்றத்திற்காக 6 வனக்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவுட்டுக்காய் பயன்படுத்தியதற்காக வெடிபொருள் கையாண்ட குற்றத்திற்காக காவல் துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாவட்ட தீயணைப்பு மற்றும் தொழிற்துறை பாதுகாப்பு குழுக்கூட்டமும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீ மற்றும் தொழில்துறை பாதுகாப்பு தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறையின் அமலாக்கத்தைக் கண்காணிக்கவும், தீ விபத்துகளைத் தடுப்பது குறித்து உரிமம் வைத்திருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தீ விபத்துகளைத் தடுப்பதற்கும் தணிப்பதற்கும் சமூகப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...