வன உயிரினங்கள் உயிரிழப்பை தடுக்க மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வெடிபொருள், மின்சாரம் காரணமாக வன உயிரினங்கள் உயிரிழப்பதை தடுக்க மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வன உயிரினங்கள் வெடிபொருள்/அவுட்டுக்காய் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நிகழ்வுகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் ஜூலை 22 அன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் வனக்களப்பணியாளர்கள் மற்றும் மின்வாரிய பணியாளர்களுடன் இணைந்து தொடர்ச்சியாக வனங்களை ஒட்டி உள்ள பகுதியில் கூட்டுத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தணிக்கையின் போது தாழ்வாக உள்ள மின் கம்பிகள் மற்றும் சாய்வான சேதமடைந்த மின்கம்பிகள் கண்டறியப்பட்டு உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளன.



கடந்த ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2024 வரை சுமார் 2000 எண்ணிக்கையிலான தாழ்வான மின் கம்பிகள் மற்றும் சேதமடைந்த சாய்வான மின்கம்பங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளன. மேலும், முற்றிலும் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனங்களை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் உள்ள மின்வேலிகளையும் மின்வாரிய பணியாளர்களுடன் ஆய்வு செய்து, அனுமதிக்கப்பட்ட அளவிலான மின்னழுத்தம் பயன்படுத்தப்படுகிறதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.



கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அவுட்டுக்காய் (நாட்டு வெடி) பயன்படுத்தி வனஉயிரினங்கள் வேட்டையாடுவதைத் தவிர்க்க காவல் துறையுடன் இணைந்து தொடர் களத்தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஓராண்டில் அவுட்டுக்காய் பயன்படுத்தி வேட்டையாடிய குற்றத்திற்காக 6 வனக்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவுட்டுக்காய் பயன்படுத்தியதற்காக வெடிபொருள் கையாண்ட குற்றத்திற்காக காவல் துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாவட்ட தீயணைப்பு மற்றும் தொழிற்துறை பாதுகாப்பு குழுக்கூட்டமும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீ மற்றும் தொழில்துறை பாதுகாப்பு தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறையின் அமலாக்கத்தைக் கண்காணிக்கவும், தீ விபத்துகளைத் தடுப்பது குறித்து உரிமம் வைத்திருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தீ விபத்துகளைத் தடுப்பதற்கும் தணிப்பதற்கும் சமூகப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி அறிவுறுத்தினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...