கோவை ஆற்றுப்பாலம் இந்துக்கள் மயானத்தை சீரமைக்க வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோரிக்கை

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஆற்றுப்பாலம் இந்துக்கள் மயானத்தை சீரமைக்க கோவை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆடி 18 வழிபாட்டிற்கு முன் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Coimbatore: கோவை ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள இந்துக்கள் மயானத்தை சீரமைத்து தரும்படி கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் சாலை ஆற்றுப்பாலம் பகுதியில் அமைந்துள்ள இந்துக்கள் மயானத்தில், வரும் ஆடி 18 (03.08.2024) அன்று காலம் காலமாக இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் வழிபாடு நடத்துவது வழக்கம். தற்போது இப்பகுதியில் உள்ள சமாதிகள் அனைத்தும் முட்புதர்களால் சூழப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வழிபாடு செய்வதில் சிரமம் ஏற்படும் என்று எம்எல்ஏ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்றுவதோடு, குடிநீர் வசதி, உப்பு தண்ணீர் வசதி மற்றும் தற்காலிக கழிப்பறை வசதி ஆகியவற்றை செய்து தரும்படி வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் வரும் ஆடி 18 அன்று மக்கள் எந்த இடையூறும் இன்றி தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபாடு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஆணையர் இக்கோரிக்கையை ஏற்று, விரைவில் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...