கோவை ஆற்றுப்பாலம் இந்துக்கள் மயானத்தை சீரமைக்க வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோரிக்கை

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஆற்றுப்பாலம் இந்துக்கள் மயானத்தை சீரமைக்க கோவை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆடி 18 வழிபாட்டிற்கு முன் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Coimbatore: கோவை ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள இந்துக்கள் மயானத்தை சீரமைத்து தரும்படி கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் சாலை ஆற்றுப்பாலம் பகுதியில் அமைந்துள்ள இந்துக்கள் மயானத்தில், வரும் ஆடி 18 (03.08.2024) அன்று காலம் காலமாக இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் வழிபாடு நடத்துவது வழக்கம். தற்போது இப்பகுதியில் உள்ள சமாதிகள் அனைத்தும் முட்புதர்களால் சூழப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வழிபாடு செய்வதில் சிரமம் ஏற்படும் என்று எம்எல்ஏ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்றுவதோடு, குடிநீர் வசதி, உப்பு தண்ணீர் வசதி மற்றும் தற்காலிக கழிப்பறை வசதி ஆகியவற்றை செய்து தரும்படி வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் வரும் ஆடி 18 அன்று மக்கள் எந்த இடையூறும் இன்றி தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபாடு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஆணையர் இக்கோரிக்கையை ஏற்று, விரைவில் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...