உடுமலை அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

உடுமலை அருகே குட்டியகவுண்டனூர் கிராம மக்கள் 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குட்டியகவுண்டனூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 15 நாட்களாக இப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், உடுமலை பிரதான சாலையில் காலி குடங்களுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சாலைமறியல் போராட்டம் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சித் துறை குடிநீர் வழங்கல் அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குட்டியகவுண்டனூர், உரல்பட்டி, ஆண்டியகவுண்டனூர், ஜக்கம்பாளையம், கிழவன்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், "சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக குடிநீர் வழங்கினால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம்" என்று தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தால் உடுமலை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...