உடுமலை அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

உடுமலை அருகே குட்டியகவுண்டனூர் கிராம மக்கள் 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குட்டியகவுண்டனூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 15 நாட்களாக இப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், உடுமலை பிரதான சாலையில் காலி குடங்களுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சாலைமறியல் போராட்டம் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சித் துறை குடிநீர் வழங்கல் அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குட்டியகவுண்டனூர், உரல்பட்டி, ஆண்டியகவுண்டனூர், ஜக்கம்பாளையம், கிழவன்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், "சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக குடிநீர் வழங்கினால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம்" என்று தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தால் உடுமலை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...