உடுமலை அருகே உயர் மின் கோபுரம் சரிந்து விழுந்து 4 பேர் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் வேடப்பட்டியில் உயர் மின் கோபுரம் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் வேடப்பட்டி பகுதியில் இன்று அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்தது. பொள்ளாச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அருகே நெய்வேலியில் இருந்து உடுமலைக்கு மின்சாரம் கொண்டு வரும் புதிய உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக உயர் மின் கோபுரம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் கோபுரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த செல்வமாணிக்கம், பெருமாள், தங்கராஜ், சேதுபதி ஆகிய நான்கு தொழிலாளர்கள் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.



உடனடியாக அருகில் இருந்த விவசாயிகள் காயமடைந்தவர்களை மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் செய்யப்படாமல், இரவு நேரத்தில் மட்டுமே நடைபெற்று வந்ததாகத் தெரிவித்தனர். மேலும், கோபுரத்தின் கம்பிகள் தரம் குறைவாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...