மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகசுந்தரம் ராஜினாமா செய்துள்ளார்.

Coimbatore:
கோவை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் TR சண்முகசுந்தரம், தமது பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு பணிவான வணக்கம் தெரிவித்து, கோவை வடக்கு மாவட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Ycox7etVVUrTY8CyZJnArSfRgHuTT0xC0pgqLijd.jpg

தனது குடும்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு பணி சுமைகள் காரணமாக, தாம் வகித்து வந்த பதவியிலிருந்தும் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
TR சண்முகசுந்தரம், கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த திமுக அரசியல்வாதியாக செயல்பட்டு வந்தவர். கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து உள்ளூர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டார்.

TQ1e4gfuf7wKvjl7Yjthen5jfYkJjv3VfAV621MD.jpg
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார்.
அண்மையில் 2026 தேர்தலை முன்னிட்டு, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்த சம்பவங்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டன.
இந்த நிலையில் அவர் ராஜினாமா செய்திருப்பது கோவை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை பெற்றுள்ளது.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...