கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், 71-வது வார்டுக்குட்பட்ட ரெட் பீல்ட்ஸ், அப்புசாமி லே-அவுட் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றும் பணியினையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியினையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து, அதேப்பகுதியின் மழைநீர் வடிகாலில் நீர் தேங்காதவாறு சீராக செல்ல உரிய நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அப்பகுதிகளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், மாநகராட்சி பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின், ரெட் பீல்ட்ஸ், அப்புசாமி லே-அவுட் பகுதியில் மக்களின் குறைகளை கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர், அதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அப்பகுதியில் நடை பயிற்சி செய்பவர்களின் தேவைக்கேற்ப நடைபாதை வசதிகள், மின்விளக்குகள் போன்றவற்றை உடனடியாக சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, அதேப்பகுதியின் மழைநீர் வடிகாலில் நீர் தேங்காதவாறு சீராக செல்ல உரிய நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அப்பகுதிகளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், மாநகராட்சி பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின், ரெட் பீல்ட்ஸ், அப்புசாமி லே-அவுட் பகுதியில் மக்களின் குறைகளை கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர், அதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அப்பகுதியில் நடை பயிற்சி செய்பவர்களின் தேவைக்கேற்ப நடைபாதை வசதிகள், மின்விளக்குகள் போன்றவற்றை உடனடியாக சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.