கோவை பேருந்தில் மூதாட்டியின் 5 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது

கோவையில் அரசு பேருந்தில் பயணித்த 67 வயது மூதாட்டியின் 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3000 பணம் திருடப்பட்டது. சுந்தராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.


கோவை: கோவை ஈச்சனாரி அருகே உள்ள ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி தனலட்சுமி (67) என்ற மூதாட்டியிடமிருந்து அரசு பேருந்தில் 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3000 பணம் திருடப்பட்டுள்ளது.

நேற்று (ஜூலை 19) தனது மகள் வீட்டிற்குச் செல்வதற்காக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இருந்து அரசு நகர பேருந்தில் ஏறி சுந்தராபுரம் வந்து கொண்டிருந்தார் தனலட்சுமி. மகள் வீட்டை அடைந்த பின்னர், தனது கையப்பையில் வைத்திருந்த பணப்பையைக் காணவில்லை என்பதை உணர்ந்தார். அந்தப் பணப்பையில் 5 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியும், ரூ.3000 பணமும் இருந்தது.

பேருந்தில் பயணம் செய்யும் போது திருட்டு நடந்திருக்கலாம் என்று சந்தேகித்த தனலட்சுமி, இது குறித்து சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் ஞானபிரகாஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...