பில்லூர் அணை நீர்மட்டம் உயர்வு: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு 5வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியதால், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 5வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் உயர துவங்கி கடந்த நான்கு நாட்களுக்கு முன் அணையின் மொத்த நீர்தேக்க உயரமான 100 அடியில் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. தற்போது அணைக்கு வினாடிக்கு 10,120 கன அடி வரை நீர்வரத்து உள்ளதால் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

இந்த நிலையில், பவானியாற்றங்கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஐந்தாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை இன்று ஜூலை 20 அன்று விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலங்களில் உடனடியாக உதவி பெற 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...