பில்லூர் அணை நீர்மட்டம் உயர்வு: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு 5வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியதால், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 5வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் உயர துவங்கி கடந்த நான்கு நாட்களுக்கு முன் அணையின் மொத்த நீர்தேக்க உயரமான 100 அடியில் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. தற்போது அணைக்கு வினாடிக்கு 10,120 கன அடி வரை நீர்வரத்து உள்ளதால் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

இந்த நிலையில், பவானியாற்றங்கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஐந்தாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை இன்று ஜூலை 20 அன்று விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலங்களில் உடனடியாக உதவி பெற 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...