பில்லூர் அணை நீர்மட்டம் உயர்வு: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு 5வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியதால், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 5வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் உயர துவங்கி கடந்த நான்கு நாட்களுக்கு முன் அணையின் மொத்த நீர்தேக்க உயரமான 100 அடியில் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. தற்போது அணைக்கு வினாடிக்கு 10,120 கன அடி வரை நீர்வரத்து உள்ளதால் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

இந்த நிலையில், பவானியாற்றங்கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஐந்தாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை இன்று ஜூலை 20 அன்று விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலங்களில் உடனடியாக உதவி பெற 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...