தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நபார்டின் 'சிறந்த FPO' விருது

சென்னையில் நடைபெற்ற நபார்டின் 43வது ஆண்டு விழாவில், ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு 'சிறந்த FPO' விருது வழங்கப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் விருதை வழங்கினார்.


ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் வெற்றிகரமாக இயங்கி வரும் தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு (FPO) நபார்டு வங்கியின் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான 'சிறந்த FPO' விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று (ஜூலை 18) நடைபெற்ற நபார்டின் 43வது ஆண்டு விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இந்த விருதை வழங்கினார்.



தமிழ்நாட்டில் நபார்டு வங்கியின் ஆதரவுடன் சிறப்பாக செயல்படும் FPO-க்களில் ஒன்றாக தென்சேரிமலை FPO தேர்வு செய்யப்பட்டுள்ளது. விழாவில் தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனரும் விவசாயியுமான திரு. ரங்கராஜ் மற்றும் ஈஷா அவுட்ரீச் சார்பில் சுவாமி நலதா ஆகியோர் அமைச்சரிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டனர்.

மண் காப்போம் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 FPO-க்களில் ஒன்றாக தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது. கோவை சுல்தான்பேட்டை பகுதியில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில், முதல் ஆண்டிலேயே 750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இணைந்தனர்.

இந்த FPO தனது உறுப்பினர் விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதலில் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. தென்னையை முதன்மைப் பயிராகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் முதலாம் ஆண்டு மொத்த விற்பனை ரூ.1.58 கோடியாகும். மேலும், ஈஷா அவுட்ரீச்சின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் FPO-க்கள் மூலம் மொத்தம் 9,377 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

விழாவில் நபார்டு வங்கியின் தலைமை மேலாளர், மண்டல மேலாளர், ரிசர்வ் வங்கியின் மண்டல மேலாளர் மற்றும் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...