தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நபார்டின் 'சிறந்த FPO' விருது

சென்னையில் நடைபெற்ற நபார்டின் 43வது ஆண்டு விழாவில், ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு 'சிறந்த FPO' விருது வழங்கப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் விருதை வழங்கினார்.


ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் வெற்றிகரமாக இயங்கி வரும் தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு (FPO) நபார்டு வங்கியின் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான 'சிறந்த FPO' விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று (ஜூலை 18) நடைபெற்ற நபார்டின் 43வது ஆண்டு விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இந்த விருதை வழங்கினார்.



தமிழ்நாட்டில் நபார்டு வங்கியின் ஆதரவுடன் சிறப்பாக செயல்படும் FPO-க்களில் ஒன்றாக தென்சேரிமலை FPO தேர்வு செய்யப்பட்டுள்ளது. விழாவில் தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனரும் விவசாயியுமான திரு. ரங்கராஜ் மற்றும் ஈஷா அவுட்ரீச் சார்பில் சுவாமி நலதா ஆகியோர் அமைச்சரிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டனர்.

மண் காப்போம் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 FPO-க்களில் ஒன்றாக தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது. கோவை சுல்தான்பேட்டை பகுதியில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில், முதல் ஆண்டிலேயே 750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இணைந்தனர்.

இந்த FPO தனது உறுப்பினர் விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதலில் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. தென்னையை முதன்மைப் பயிராகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் முதலாம் ஆண்டு மொத்த விற்பனை ரூ.1.58 கோடியாகும். மேலும், ஈஷா அவுட்ரீச்சின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் FPO-க்கள் மூலம் மொத்தம் 9,377 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

விழாவில் நபார்டு வங்கியின் தலைமை மேலாளர், மண்டல மேலாளர், ரிசர்வ் வங்கியின் மண்டல மேலாளர் மற்றும் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...