தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நபார்டின் 'சிறந்த FPO' விருது

சென்னையில் நடைபெற்ற நபார்டின் 43வது ஆண்டு விழாவில், ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு 'சிறந்த FPO' விருது வழங்கப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் விருதை வழங்கினார்.


ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் வெற்றிகரமாக இயங்கி வரும் தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு (FPO) நபார்டு வங்கியின் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான 'சிறந்த FPO' விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று (ஜூலை 18) நடைபெற்ற நபார்டின் 43வது ஆண்டு விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இந்த விருதை வழங்கினார்.



தமிழ்நாட்டில் நபார்டு வங்கியின் ஆதரவுடன் சிறப்பாக செயல்படும் FPO-க்களில் ஒன்றாக தென்சேரிமலை FPO தேர்வு செய்யப்பட்டுள்ளது. விழாவில் தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனரும் விவசாயியுமான திரு. ரங்கராஜ் மற்றும் ஈஷா அவுட்ரீச் சார்பில் சுவாமி நலதா ஆகியோர் அமைச்சரிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டனர்.

மண் காப்போம் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25 FPO-க்களில் ஒன்றாக தென்சேரிமலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது. கோவை சுல்தான்பேட்டை பகுதியில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில், முதல் ஆண்டிலேயே 750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இணைந்தனர்.

இந்த FPO தனது உறுப்பினர் விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதலில் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. தென்னையை முதன்மைப் பயிராகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் முதலாம் ஆண்டு மொத்த விற்பனை ரூ.1.58 கோடியாகும். மேலும், ஈஷா அவுட்ரீச்சின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் FPO-க்கள் மூலம் மொத்தம் 9,377 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

விழாவில் நபார்டு வங்கியின் தலைமை மேலாளர், மண்டல மேலாளர், ரிசர்வ் வங்கியின் மண்டல மேலாளர் மற்றும் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...