கோவை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிப்பு

கோவை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பு இல்லை என்பதோடு, சிறப்புக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேரில் வருகை புரிவோருக்கு உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு காலத்திற்கு கணினி இயக்கம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதம் ரூ.750 உதவித் தொகை வழங்கப்படும்.

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 30 கிலோமீட்டர் தொலைவு வரை இலவச பேருந்து அட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 98651-28182, 94990-55692, 88381-58132, 94422-39112 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...