கோவை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிப்பு

கோவை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பு இல்லை என்பதோடு, சிறப்புக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேரில் வருகை புரிவோருக்கு உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு காலத்திற்கு கணினி இயக்கம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதம் ரூ.750 உதவித் தொகை வழங்கப்படும்.

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 30 கிலோமீட்டர் தொலைவு வரை இலவச பேருந்து அட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 98651-28182, 94990-55692, 88381-58132, 94422-39112 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...