தாராபுரத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்

தாராபுரத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை அமைச்சர் கயல்விழி தொடக்கி வைத்தார். 15 அரசுத் துறைகளின் 44 திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 300க்கும் மேற்பட்ட மனுக்களில் 240 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ருத்ராவதி சமுதாய நலக்கூடத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்த திட்டத்தின் கீழ், 15 அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் 44 அரசு திட்டங்களின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் சமர்ப்பித்தனர். இதில் எரிசக்தி துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன், மகளிர் உரிமைத் துறை ஆகியவை அடங்கும்.



முகாமில் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 240 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், திமுக துணைச் செயலாளர் குமரவேல், திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் குணசேகரன், ஊராட்சி தலைவர்கள் பாலசுப்பிரமணியம், மகேந்திரன், மயில்சாமி, ஸ்ரீதர், கவுன்சிலர் காங்கிரஸ் ராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், குண்டடம் திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் தங்கவேல், குணசேகரன், சின்னத்துரை, கதிரேஸ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...