தாராபுரத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்

தாராபுரத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை அமைச்சர் கயல்விழி தொடக்கி வைத்தார். 15 அரசுத் துறைகளின் 44 திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 300க்கும் மேற்பட்ட மனுக்களில் 240 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ருத்ராவதி சமுதாய நலக்கூடத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்த திட்டத்தின் கீழ், 15 அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் 44 அரசு திட்டங்களின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் சமர்ப்பித்தனர். இதில் எரிசக்தி துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன், மகளிர் உரிமைத் துறை ஆகியவை அடங்கும்.



முகாமில் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 240 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், திமுக துணைச் செயலாளர் குமரவேல், திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் குணசேகரன், ஊராட்சி தலைவர்கள் பாலசுப்பிரமணியம், மகேந்திரன், மயில்சாமி, ஸ்ரீதர், கவுன்சிலர் காங்கிரஸ் ராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், குண்டடம் திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் தங்கவேல், குணசேகரன், சின்னத்துரை, கதிரேஸ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...