தாராபுரத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்

தாராபுரத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை அமைச்சர் கயல்விழி தொடக்கி வைத்தார். 15 அரசுத் துறைகளின் 44 திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 300க்கும் மேற்பட்ட மனுக்களில் 240 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ருத்ராவதி சமுதாய நலக்கூடத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்த திட்டத்தின் கீழ், 15 அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் 44 அரசு திட்டங்களின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் சமர்ப்பித்தனர். இதில் எரிசக்தி துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன், மகளிர் உரிமைத் துறை ஆகியவை அடங்கும்.



முகாமில் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 240 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், திமுக துணைச் செயலாளர் குமரவேல், திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் குணசேகரன், ஊராட்சி தலைவர்கள் பாலசுப்பிரமணியம், மகேந்திரன், மயில்சாமி, ஸ்ரீதர், கவுன்சிலர் காங்கிரஸ் ராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், குண்டடம் திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் தங்கவேல், குணசேகரன், சின்னத்துரை, கதிரேஸ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...