தாராபுரத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்

தாராபுரத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை அமைச்சர் கயல்விழி தொடக்கி வைத்தார். 15 அரசுத் துறைகளின் 44 திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 300க்கும் மேற்பட்ட மனுக்களில் 240 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ருத்ராவதி சமுதாய நலக்கூடத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்த திட்டத்தின் கீழ், 15 அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் 44 அரசு திட்டங்களின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் சமர்ப்பித்தனர். இதில் எரிசக்தி துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன், மகளிர் உரிமைத் துறை ஆகியவை அடங்கும்.



முகாமில் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 240 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், திமுக துணைச் செயலாளர் குமரவேல், திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் குணசேகரன், ஊராட்சி தலைவர்கள் பாலசுப்பிரமணியம், மகேந்திரன், மயில்சாமி, ஸ்ரீதர், கவுன்சிலர் காங்கிரஸ் ராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், குண்டடம் திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் தங்கவேல், குணசேகரன், சின்னத்துரை, கதிரேஸ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...