கோவையில் பல்வேறு குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

கோவையில் இறந்த பல்வேறு குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். மூத்த கட்சி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கல்வியாளர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.


கோவை: கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் முன்னாள் எம்.எல்.ஏ., இன்று (ஜூலை 17) பல்வேறு குடும்பங்களுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.



முதலில், கோவை மாநகர் மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் மோசஸின் தாயார் சந்திரா அவர்களின் மறைவையொட்டி, கவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நா.கார்த்திக் சென்று குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இந்த நிகழ்வில் 81-வது வட்டக் கழகச் செயலாளர் டவுன் பா.ஆனந்த் உடனிருந்தார்.



அடுத்ததாக, கோவை மாவட்ட வர்த்தகர் அணி துணைத் தலைவர் எம்.எஸ்.எம்.தங்கவேல் தாயார் சுந்தராம்பாள் அவர்களின் மறைவையொட்டி, நல்லாம்பாளையம் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று, உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், கணபதி பகுதி திமுக செயலாளர் கணபதி லோகு, சி.எஸ்.முருகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.



தொடர்ந்து, கோவை பிரபு இண்டஸ்ட்ரீஸ் அரவிந்த் அவர்களின் மனைவி கிருத்திகா அவர்களின் மறைவையொட்டி, நவ இந்தியா அருகில் உள்ள அவரது இல்லத்திற்கு நா.கார்த்திக் சென்று குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.



இறுதியாக, கோவை நேஷனல் மாடல் பள்ளிக் குழுமங்களின் தாளாளர் ப. மோகன் சந்தர் அவர்களின் தாயார் ப.சாந்தாமணி அவர்களின் மறைவையொட்டி, கல்லூரி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று, உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன் உடனிருந்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...