கோவையில் பல்வேறு குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

கோவையில் இறந்த பல்வேறு குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். மூத்த கட்சி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கல்வியாளர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.


கோவை: கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் முன்னாள் எம்.எல்.ஏ., இன்று (ஜூலை 17) பல்வேறு குடும்பங்களுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.



முதலில், கோவை மாநகர் மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் மோசஸின் தாயார் சந்திரா அவர்களின் மறைவையொட்டி, கவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நா.கார்த்திக் சென்று குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இந்த நிகழ்வில் 81-வது வட்டக் கழகச் செயலாளர் டவுன் பா.ஆனந்த் உடனிருந்தார்.



அடுத்ததாக, கோவை மாவட்ட வர்த்தகர் அணி துணைத் தலைவர் எம்.எஸ்.எம்.தங்கவேல் தாயார் சுந்தராம்பாள் அவர்களின் மறைவையொட்டி, நல்லாம்பாளையம் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று, உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், கணபதி பகுதி திமுக செயலாளர் கணபதி லோகு, சி.எஸ்.முருகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.



தொடர்ந்து, கோவை பிரபு இண்டஸ்ட்ரீஸ் அரவிந்த் அவர்களின் மனைவி கிருத்திகா அவர்களின் மறைவையொட்டி, நவ இந்தியா அருகில் உள்ள அவரது இல்லத்திற்கு நா.கார்த்திக் சென்று குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.



இறுதியாக, கோவை நேஷனல் மாடல் பள்ளிக் குழுமங்களின் தாளாளர் ப. மோகன் சந்தர் அவர்களின் தாயார் ப.சாந்தாமணி அவர்களின் மறைவையொட்டி, கல்லூரி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று, உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன் உடனிருந்தார்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...