கோவை மாநகராட்சியின் முதல் வார்டில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்திப் பணிகள்

கோவை மாநகராட்சியின் முதல் வார்டில், குடிநீர் விநியோகம், கொசு ஒழிப்பு, மழைநீர் வடிகால் சுத்தம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் நேற்று (ஜூலை 16) நடைபெற்றன.


Coimbatore: கோவை மாநகராட்சியின் முதல் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (ஜூலை 16) பல்வேறு அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றன. வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் அறிவுறுத்தலின் பேரில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

விஸ்வநாதபுரம், வி.பி.வி நகர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப் பயன்படும் பிரதான குடிநீர் குழாயின் கேட்வால்வில் ஏற்பட்டிருந்த பழுது சரி செய்யப்பட்டு, குடிநீர் விநியோகம் மீண்டும் துவக்கப்பட்டது.



ஜோதி நகர் பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கப்பட்டது. ஜல்லிக்காடு, மாரியம்மன் கோவில் மேற்கு வீதி, ருக்கம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டன. அதோடு, இப்பகுதிகளில் காணப்பட்ட முட்புதர்களும் அகற்றப்பட்டன.



வார்டு முழுவதும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பணிகள் மூலம் வார்டில் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...