உடுமலை அருகே பால் வண்டி தீப்பிடித்து எரிந்து நாசம் - ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உயிர் தப்பினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நான்குவழிச் சாலையில் பால் வண்டி திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உயிர் தப்பினர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இந்திரா நகர் பகுதியில் நான்குவழிச் சாலையில் பால் வண்டி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 11 மணியளவில், பழனியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்த பால் வண்டி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உடுமலை தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் கடுமையாக போராடி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். எனினும், பால் வண்டி முற்றிலும் எரிந்து நாசமாகியது.

முதற்கட்ட விசாரணையில், பால் வண்டியின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீ விபத்துக்கு காரணம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.



நல்ல வேளையாக, தீ விபத்து ஏற்படுவதற்கு முன் வாகனத்திலிருந்து புகை வருவதை கவனித்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உடனடியாக கீழே இறங்கி விட்டனர். இதனால் இருவரும் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...