சிறந்த வீட்டுத்தோட்டங்களுக்கு 'சிறுதுளி' சார்பில் விருதுகள் - விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் சிறந்த வீட்டுத்தோட்டங்களுக்கு 'சிறுதுளி' அமைப்பு விருதுகள் வழங்க உள்ளது. ஜூலை 27க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நகர்ப்புற பசுமையை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதி இது.


கோவை: 'சிறுதுளி' அமைப்பு, கோவை மற்றும் மேட்டுப்பாளையம் மக்களுக்கு 'சிறந்த வீட்டுத்தோட்டம் விருது-2024' போட்டியை அறிவித்துள்ளது. இந்த போட்டியை தோட்டக்கலை மேம்பாடு மற்றும் நகர்ப்புற பசுமையை ஊக்குவிக்கும் 'தார்மிக் கார்டன்ஸ்' நிறுவனம் மற்றும் 'தினமலர்' நாளிதழ் உடன் இணைந்து நடத்துகிறது.

'சிறுதுளி' அமைப்பு நொய்யல் உள்ளிட்ட நீர்நிலைகளை மீட்பதற்காக இடைவிடாது இயங்கி வருவதோடு, நகர்ப்புறங்களில் பசுமையை அதிகப்படுத்துவதற்கு மரம் நடுதல் மற்றும் அடர் வனம் அமைத்தல் ஆகிய பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும், வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டங்கள் அமைப்பதையும் ஊக்குவித்து வருகிறது.

கோவை நகரில் 'மாடி வனம்' எனும் திட்டத்தைத் துவக்கி, நகர்ப்புறங்களில் பசுமையை அதிகரிப்பதுடன், மக்களுக்கு ஆரோக்கிய உணவு கிடைக்கவும் 'சிறுதுளி' அமைப்பு ஊக்குவித்து வருகிறது. வீடுகளிலேயே பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற ரசாயனங்கள் இல்லாத இயற்கை பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்யும் வழிமுறைகளில், 'தார்மிக் கார்டன்ஸ்' நிறுவனம் உதவுகிறது.

கோவையில் தலா 10, மேட்டுப்பாளையத்தில் தலா ஐந்து என்ற எண்ணிக்கையில், சிறந்த வீட்டுத் தோட்ட விருதுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. போட்டியில் பங்கேற்க விரும்புவோர், பெயர், தொடர்பு எண், இ-மெயில், தோட்டத்தின் பரப்பு, மரங்களின் எண்ணிக்கை, மரங்கள் மற்றும் தாவரங்களின் வகைகள் ஆகிய விபரங்களுடன், தோட்டத்தின் 10 போட்டோக்களுடன் விண்ணப்பங்களை, வரும் ஜூலை 27க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது திருச்சி ரோட்டில் கண்ணம்பாளையத்தில் 26/E என்ற இலக்கத்திலுள்ள தார்மிக் கார்டன்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்திலும் பதிவு செய்யலாம். விருது வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 98946 31551, 84899 43095, 96003 14328 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...