சிறந்த வீட்டுத்தோட்டங்களுக்கு 'சிறுதுளி' சார்பில் விருதுகள் - விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் சிறந்த வீட்டுத்தோட்டங்களுக்கு 'சிறுதுளி' அமைப்பு விருதுகள் வழங்க உள்ளது. ஜூலை 27க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நகர்ப்புற பசுமையை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதி இது.


கோவை: 'சிறுதுளி' அமைப்பு, கோவை மற்றும் மேட்டுப்பாளையம் மக்களுக்கு 'சிறந்த வீட்டுத்தோட்டம் விருது-2024' போட்டியை அறிவித்துள்ளது. இந்த போட்டியை தோட்டக்கலை மேம்பாடு மற்றும் நகர்ப்புற பசுமையை ஊக்குவிக்கும் 'தார்மிக் கார்டன்ஸ்' நிறுவனம் மற்றும் 'தினமலர்' நாளிதழ் உடன் இணைந்து நடத்துகிறது.

'சிறுதுளி' அமைப்பு நொய்யல் உள்ளிட்ட நீர்நிலைகளை மீட்பதற்காக இடைவிடாது இயங்கி வருவதோடு, நகர்ப்புறங்களில் பசுமையை அதிகப்படுத்துவதற்கு மரம் நடுதல் மற்றும் அடர் வனம் அமைத்தல் ஆகிய பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும், வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டங்கள் அமைப்பதையும் ஊக்குவித்து வருகிறது.

கோவை நகரில் 'மாடி வனம்' எனும் திட்டத்தைத் துவக்கி, நகர்ப்புறங்களில் பசுமையை அதிகரிப்பதுடன், மக்களுக்கு ஆரோக்கிய உணவு கிடைக்கவும் 'சிறுதுளி' அமைப்பு ஊக்குவித்து வருகிறது. வீடுகளிலேயே பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற ரசாயனங்கள் இல்லாத இயற்கை பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்யும் வழிமுறைகளில், 'தார்மிக் கார்டன்ஸ்' நிறுவனம் உதவுகிறது.

கோவையில் தலா 10, மேட்டுப்பாளையத்தில் தலா ஐந்து என்ற எண்ணிக்கையில், சிறந்த வீட்டுத் தோட்ட விருதுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. போட்டியில் பங்கேற்க விரும்புவோர், பெயர், தொடர்பு எண், இ-மெயில், தோட்டத்தின் பரப்பு, மரங்களின் எண்ணிக்கை, மரங்கள் மற்றும் தாவரங்களின் வகைகள் ஆகிய விபரங்களுடன், தோட்டத்தின் 10 போட்டோக்களுடன் விண்ணப்பங்களை, வரும் ஜூலை 27க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது திருச்சி ரோட்டில் கண்ணம்பாளையத்தில் 26/E என்ற இலக்கத்திலுள்ள தார்மிக் கார்டன்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்திலும் பதிவு செய்யலாம். விருது வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 98946 31551, 84899 43095, 96003 14328 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...