கோவை அரசினர் மகளிர் கல்லூரியில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

கோவை அரசினர் மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 15 வகுப்பறைகள், 10 ஆய்வகங்கள் கொண்ட புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்வில் திமுக செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


கோவை: கோவையில் உள்ள அரசினர் மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உயர் கல்வித்துறை சார்பில் 15 வகுப்பறைகள் மற்றும் 10 ஆய்வகங்கள் கொண்ட புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ஜூலை 16 அன்று திறந்து வைத்தார்.



இந்த நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், கல்லூரி முதல்வர் முனைவர் வி.ராஜேந்திரன், எக்ஸிகியூட்டிவ் திருநாவுக்கரசு, துணை முதல்வர் கண்ணகி, அனைத்து கல்லூரி துறை தலைவர்கள், PWDC பொறியாளர்கள், வித்யா ராமனாதன் MC, கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...