திருப்பூரில் 'கன்ஸ்ட்ரோ மெகா 2024' கட்டுமான பொருட்கள் கண்காட்சி வரும் 18ஆம் தேதி தொடக்கம்

திருப்பூரில் கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி 'கன்ஸ்ட்ரோ மெகா 2024' வரும் 18ஆம் தேதி முதல் 4 நாட்கள் நடைபெறுகிறது. 300 அரங்குகளில் புதிய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும்.


Coimbatore: திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில், வரும் 18ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெறும் கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள வித்யா கார்த்திக் மகாலில் 'கன்ஸ்ட்ரோ மெகா 2024' என்ற பெயரில் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சி தினமும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். இதில் கட்டுமானத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் 300 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இது 19வது ஆண்டாக நடத்தப்படும் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியாகும்.



கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், "சுமார் 350 கோடி ரூபாய் அளவிலான வர்த்தக விசாரணை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நாள்தோறும் புதிய டிசைன்கள், தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. அதற்கேற்ப கட்டட பொறியாளர்கள், வீடு கட்டுவோர் மற்றும் கட்டடம் கட்டும் எண்ணத்துடன் இருப்போர் அனைவருக்கும் கட்டுமான பணி சார்ந்த 'அப்டேட்' ஆக இந்த கண்காட்சியை நடத்துகிறோம்" என்றனர்.

வீடுகளின் முகப்பு கதவு முதல் சமையலறை வரை தேவைப்படும் கட்டுமான பொருட்களின் தற்போதைய புதிய வரவுகள் கண்காட்சியில் இடம்பெறும். மழை நீரை சேகரித்து குடிநீராக மாற்றும் இறக்குமதி தொழில்நுட்பம், மாடுலர் கிச்சன், எடை குறைந்த மெகா சைஸ் டைல்ஸ், செயற்கை மார்பிள், டிஜிட்டல் லாக், பயோ செப்டிக் டேங்க் என இதுவரை கண்டிராத, கற்பனைக்கு எட்டாத தயாரிப்புகள் கண்காட்சியில் இடம்பெறும் என தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...