கோனேரிப்பட்டியில் புதிய நியாயவிலைக் கடை கட்டிடம்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் கோனேரிப்பட்டியில் ரூ.8.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார். பள்ளி மாணவர்களுடன் உரையாடிய அமைச்சர், அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னிவாடி ஊராட்சியில் கோனேரிப்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக நியாயவிலைக் கடை கட்டிடம் இன்று திறக்கப்பட்டது.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-2022-ன் கீழ் சுமார் ரூ.8.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.



அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர், அங்குள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து, கோனேரிப்பட்டியில் உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்ற அமைச்சர், அங்கு படிக்கும் மாணவர்களிடம் அவர்களின் படிப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர், மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...