கோவை PRS வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட மோட்டார் வாகன பிரிவு அலுவலகம் திறப்பு

கோவை PRS வளாகத்தில் 100 ஆண்டுகள் பழமையான மோட்டார் வாகன பிரிவு அலுவலகம் மறுசீரமைக்கப்பட்டு, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனால் திறந்து வைக்கப்பட்டது. காவலர்களுக்கான புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.


கோவை: கோவை PRS வளாகத்தில் உள்ள கவாத்து மைதானம் அருகில் அமைந்துள்ள சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் வாகன பிரிவு அலுவலக கட்டிடம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.



இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து, பின்னர் பார்வையிட்டார்.



இந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, கட்டிடத்தின் பின்புறத்தில் காவலர்களுக்கான பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.



இதில் காவலர்களுக்கான ஓய்வு அறை, இசைவாதியங்களுக்கான தனி அறை, மின்சார அறைகள் மற்றும் புதிய கழிவறைகள் ஆகியவை அடங்கும். இந்த புதிய வசதிகள் காவலர்களின் பணிச்சூழலை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நிகழ்வின் போது காவலர்களுடன் உரையாடிய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், பழைய கட்டிடங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். "பழைய கட்டிடங்களை இடிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் இந்த மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள ஓய்வு அறைகள் மற்றும் கழிவறைகள் கவாத்து பயிற்சி மேற்கொள்ளும் காவலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், குறிப்பாக பெண் காவலர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...