கோவையில் திருமண மண்டபத்தில் புகைப்படக்காரரின் கேமரா திருட்டு: போலீஸ் விசாரணை

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் புகைப்படக்காரர் சதாசிவத்தின் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா திருடப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.


கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் புகைப்படக்காரர் ஒருவரின் கேமரா மற்றும் பணப்பை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து புகைப்படக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக திருமண மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வருகிறார். வெள்ளலூரில் ஸ்டுடியோ நடத்தி வரும் சதாசிவம், நேற்று ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நீராட்டு விழாவிற்கு புகைப்படம் எடுப்பதற்காக இரண்டு கேமராக்களுடன் சென்றுள்ளார்.

நிகழ்ச்சியின் போது, சதாசிவம் ஒரு கேமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த வேளையில், மற்றொரு கேமராவை மேடையின் மீது வைத்திருந்தார். புகைப்படம் எடுத்து முடித்து திரும்பி வந்த போது, மேடையில் வைத்திருந்த கேமரா பையுடன் காணாமல் போயிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சதாசிவம், உடனடியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், ஒரு இளைஞர் சதாசிவத்தின் கேமராவை பையோடு எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

திருடப்பட்ட பையில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, லென்ஸ், சார்ஜர் மற்றும் 15,000 ரூபாய் பணம் இருந்ததாக சதாசிவம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், ராமநாதபுரம் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருடனைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...