கோவையில் திருமண மண்டபத்தில் புகைப்படக்காரரின் கேமரா திருட்டு: போலீஸ் விசாரணை

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் புகைப்படக்காரர் சதாசிவத்தின் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா திருடப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.


கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் புகைப்படக்காரர் ஒருவரின் கேமரா மற்றும் பணப்பை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து புகைப்படக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக திருமண மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வருகிறார். வெள்ளலூரில் ஸ்டுடியோ நடத்தி வரும் சதாசிவம், நேற்று ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நீராட்டு விழாவிற்கு புகைப்படம் எடுப்பதற்காக இரண்டு கேமராக்களுடன் சென்றுள்ளார்.

நிகழ்ச்சியின் போது, சதாசிவம் ஒரு கேமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த வேளையில், மற்றொரு கேமராவை மேடையின் மீது வைத்திருந்தார். புகைப்படம் எடுத்து முடித்து திரும்பி வந்த போது, மேடையில் வைத்திருந்த கேமரா பையுடன் காணாமல் போயிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சதாசிவம், உடனடியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், ஒரு இளைஞர் சதாசிவத்தின் கேமராவை பையோடு எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

திருடப்பட்ட பையில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, லென்ஸ், சார்ஜர் மற்றும் 15,000 ரூபாய் பணம் இருந்ததாக சதாசிவம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், ராமநாதபுரம் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருடனைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...