மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம்: 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்

மேட்டுப்பாளையம் சங்கர் நகரில் கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் இரா.அமுதா அவர்களின் ஆலோசனையின் பேரில், கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி இணைந்து மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதி மக்களுக்கு, பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.



மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அசரப் அலி மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். சங்கர் நகர் பகுதி வார்டு கவுன்சிலர் சங்கீதா முன்னிலை வகித்தார்.



கோவை, கவுண்டம்பாளையம் இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி பக்திகாமானாந்தர் மகராஜ் தலைமை தாங்கினார். சுவாமி மஹாம்பிகானந்தர் தலைமையிலான மருத்துவ குழுவினர், மருத்துவர் நந்தகிருஷ்ணன், செவிலியர் ராணி பழனிச்சாமி, தன்னார்வலர்கள் திலீப், கண்ணன், கிஷோர், அஜய், யுவனேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தினர்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் எம். ஜெய்குமார் மற்றும் நகராட்சி அலுவலர் ஜெயராமன் ஆகியோர் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.



இந்த இலவச மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...