மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம்: 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்

மேட்டுப்பாளையம் சங்கர் நகரில் கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் இரா.அமுதா அவர்களின் ஆலோசனையின் பேரில், கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி இணைந்து மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதி மக்களுக்கு, பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.



மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அசரப் அலி மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். சங்கர் நகர் பகுதி வார்டு கவுன்சிலர் சங்கீதா முன்னிலை வகித்தார்.



கோவை, கவுண்டம்பாளையம் இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி பக்திகாமானாந்தர் மகராஜ் தலைமை தாங்கினார். சுவாமி மஹாம்பிகானந்தர் தலைமையிலான மருத்துவ குழுவினர், மருத்துவர் நந்தகிருஷ்ணன், செவிலியர் ராணி பழனிச்சாமி, தன்னார்வலர்கள் திலீப், கண்ணன், கிஷோர், அஜய், யுவனேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தினர்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் எம். ஜெய்குமார் மற்றும் நகராட்சி அலுவலர் ஜெயராமன் ஆகியோர் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.



இந்த இலவச மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...