பொள்ளாச்சியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட விசிக பிரமுகர் உள்பட 10 பேர் கைது: ரூ.2.70 லட்சம் பறிமுதல்

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் வீட்டில் நடந்த சூதாட்டத்தில் விசிக கோவை, நீலகிரி மண்டல துணை அமைப்பாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் ரூ.2.70 லட்சம், மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று கார்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் சூதாட்டம் நடைபெற்றதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் நடத்திய திடீர் சோதனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) பிரமுகர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள வெங்கடாசலம் என்பவரின் வீட்டிற்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திடீரென போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.



உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கப் பணம், மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று கார்களை பறிமுதல் செய்தனர்.



கைது செய்யப்பட்டவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை, நீலகிரி மண்டல துணை அமைப்பாளர் பிரபு, கார்த்திகேயன், மணிகண்டன், கணேஷ் பாபு ஆகியோர் அடங்குவர். மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...