பொள்ளாச்சியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட விசிக பிரமுகர் உள்பட 10 பேர் கைது: ரூ.2.70 லட்சம் பறிமுதல்

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் வீட்டில் நடந்த சூதாட்டத்தில் விசிக கோவை, நீலகிரி மண்டல துணை அமைப்பாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் ரூ.2.70 லட்சம், மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று கார்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் சூதாட்டம் நடைபெற்றதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் நடத்திய திடீர் சோதனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) பிரமுகர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள வெங்கடாசலம் என்பவரின் வீட்டிற்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திடீரென போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.



உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கப் பணம், மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று கார்களை பறிமுதல் செய்தனர்.



கைது செய்யப்பட்டவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை, நீலகிரி மண்டல துணை அமைப்பாளர் பிரபு, கார்த்திகேயன், மணிகண்டன், கணேஷ் பாபு ஆகியோர் அடங்குவர். மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...