கோவை கரும்புக்கடை அருகே கொள்ளைத் திட்டம் தீட்டிய 5 பேர் கைது

கோவை குனியமுத்தூரில் கரும்புக்கடை ஆசாத் நகர் அருகே கொள்ளை திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட இவர்களிடமிருந்து கத்திகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் கரும்புக்கடை ஆசாத் நகர் அருகே கொள்ளை திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

குனியமுத்தூர் போலீசார் ஜூலை 12 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கரும்புக்கடை ஆசாத் நகர் அருகே உள்ள காலி மைதானத்தில் 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முரணான பதில்களை அளித்தனர். மேலும் சோதனை செய்தபோது, அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

இதனையடுத்து, அந்த 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த முகமத யாசீர் (22), சுண்ணாம்பு காளவாயைச் சேர்ந்த முகமத் அனாஸ் (23), இப்ராஹிம் (36), சுகுணாபுரத்தைச் சேர்ந்த சர்புதீன் (23), மற்றும் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த முகமத் வாசீம் (19) ஆகியோர் ஆவர்.

கைதான 5 பேரிடமிருந்து போலீசார் 5 கத்திகள் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...