கோவை கரும்புக்கடை அருகே கொள்ளைத் திட்டம் தீட்டிய 5 பேர் கைது

கோவை குனியமுத்தூரில் கரும்புக்கடை ஆசாத் நகர் அருகே கொள்ளை திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட இவர்களிடமிருந்து கத்திகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் கரும்புக்கடை ஆசாத் நகர் அருகே கொள்ளை திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

குனியமுத்தூர் போலீசார் ஜூலை 12 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கரும்புக்கடை ஆசாத் நகர் அருகே உள்ள காலி மைதானத்தில் 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முரணான பதில்களை அளித்தனர். மேலும் சோதனை செய்தபோது, அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

இதனையடுத்து, அந்த 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த முகமத யாசீர் (22), சுண்ணாம்பு காளவாயைச் சேர்ந்த முகமத் அனாஸ் (23), இப்ராஹிம் (36), சுகுணாபுரத்தைச் சேர்ந்த சர்புதீன் (23), மற்றும் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த முகமத் வாசீம் (19) ஆகியோர் ஆவர்.

கைதான 5 பேரிடமிருந்து போலீசார் 5 கத்திகள் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...