மேட்டுப்பாளையம்-காரமடை அருகே லாரி மீது மோதிய தனியார் பேருந்து: ஒருவர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம்-காரமடை அருகே தனியார் பேருந்து அதிவேகமாக வந்து லாரி மீது மோதியதில் கீதாமணி முட்டைகடை பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-காரமடை அருகே தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக வந்து லாரி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோவை மாநகருக்கு தினமும் வந்து செல்கின்றனர். இதற்காக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக வருமானத்தை பெருக்க தனியார் பேருந்துகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இன்று மாலை மேட்டுப்பாளையம்-காரமடை அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்பு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து அதிவேகத்தில் கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து, அங்கு நின்றிருந்த இருவர் மீது மோதிவிட்டு, லாரி மீதும் மோதி நின்றது.

இந்த விபத்தில் கீதாமணி முட்டைகடை பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து நடந்த காட்சிகள் அங்குள்ள கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...