வட இந்திய கும்பல் படுகொலைகளை கண்டித்து கோவையில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை உக்கடம் அருகே, வட இந்தியாவில் தொடரும் கும்பல் படுகொலை மற்றும் அராஜகங்களை கண்டித்து SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாவட்ட துணைதலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Coimbatore: வட இந்தியாவில் தொடரும் கும்பல் படுகொலை மற்றும் அராஜகங்களை கண்டித்து SDPI கட்சி நடத்தும் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை மத்திய மாவட்டம் சார்பாக உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜூலை 12 அன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைதலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். SDPI கட்சியின் மாநில செயலாளர் ராஜா உசேன் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் முஸ்தபா, மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் காதர், மாவட்ட செயலாளர்கள் முகமது இசாக் மற்றும் மன்சூர் அலி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், வர்த்தக அணி மாவட்ட தலைவர் இப்ராகிம், தொழிற்சங்க மாவட்ட தலைவர் சைய்யது, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அப்பாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாவட்டசெயற்கு உறுப்பினர்களான சைபுதின், ஹனீப்கான், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பஷீர் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவி காமிலா பானுவும் இதில் கலந்து கொண்டார்.

SDPI கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். வட இந்தியாவில் நடைபெறும் கும்பல் படுகொலைகள் மற்றும் அராஜக செயல்களை கடுமையாக கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...