வட இந்திய கும்பல் படுகொலைகளை கண்டித்து கோவையில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை உக்கடம் அருகே, வட இந்தியாவில் தொடரும் கும்பல் படுகொலை மற்றும் அராஜகங்களை கண்டித்து SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாவட்ட துணைதலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Coimbatore: வட இந்தியாவில் தொடரும் கும்பல் படுகொலை மற்றும் அராஜகங்களை கண்டித்து SDPI கட்சி நடத்தும் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை மத்திய மாவட்டம் சார்பாக உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜூலை 12 அன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைதலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். SDPI கட்சியின் மாநில செயலாளர் ராஜா உசேன் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் முஸ்தபா, மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் காதர், மாவட்ட செயலாளர்கள் முகமது இசாக் மற்றும் மன்சூர் அலி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், வர்த்தக அணி மாவட்ட தலைவர் இப்ராகிம், தொழிற்சங்க மாவட்ட தலைவர் சைய்யது, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அப்பாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாவட்டசெயற்கு உறுப்பினர்களான சைபுதின், ஹனீப்கான், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பஷீர் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவி காமிலா பானுவும் இதில் கலந்து கொண்டார்.

SDPI கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். வட இந்தியாவில் நடைபெறும் கும்பல் படுகொலைகள் மற்றும் அராஜக செயல்களை கடுமையாக கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...