தீத்திப்பாளையம் அருகே நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்காமல் திரும்பிச் சென்ற அதிகாரிகள்..!

தீத்திப்பாளையம் அருகே பீட்டுபள்ளம் பகுதியில் 2.5 ஏக்கர் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற பேரூர் வருவாய்த்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நடவடிக்கை எடுக்காமல் திரும்பிச் சென்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் தீத்திப்பாளையம் அருகே உள்ள பீட்டுபள்ளம் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நீர்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள் வண்டி பாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 200 ஆண்டுகள் பழமையான சங்கிலி கருப்பராயன் கோயிலுக்கு செல்லும் நீர்வழிப்பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் முன்னதாக மனு அளித்திருந்தது. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.



இந்நிலையில், ஜூலை 12 ஆம் தேதி பேரூர் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற பீட்டுபள்ளம் பகுதிக்கு சென்றனர். ஆனால், அங்கு ஆக்கிரமிப்பாளர்கள் தாங்கள் முன்னதாகவே நிலத்தை அளந்ததாக கூறி, மீண்டும் நிலத்தை அளக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அதிகாரிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், பேரூர் வருவாய்த்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பிச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...