தீத்திப்பாளையம் அருகே நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்காமல் திரும்பிச் சென்ற அதிகாரிகள்..!

தீத்திப்பாளையம் அருகே பீட்டுபள்ளம் பகுதியில் 2.5 ஏக்கர் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற பேரூர் வருவாய்த்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நடவடிக்கை எடுக்காமல் திரும்பிச் சென்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் தீத்திப்பாளையம் அருகே உள்ள பீட்டுபள்ளம் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நீர்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள் வண்டி பாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 200 ஆண்டுகள் பழமையான சங்கிலி கருப்பராயன் கோயிலுக்கு செல்லும் நீர்வழிப்பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் முன்னதாக மனு அளித்திருந்தது. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.



இந்நிலையில், ஜூலை 12 ஆம் தேதி பேரூர் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற பீட்டுபள்ளம் பகுதிக்கு சென்றனர். ஆனால், அங்கு ஆக்கிரமிப்பாளர்கள் தாங்கள் முன்னதாகவே நிலத்தை அளந்ததாக கூறி, மீண்டும் நிலத்தை அளக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அதிகாரிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், பேரூர் வருவாய்த்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பிச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...