காங்கேயம் காடையூர் காடையீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பல லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காடையூரில் உள்ள காடையீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காடையூரில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பங்கசாட்சி அம்பிகை உடனமர் ஸ்ரீ காடையீஸ்வரர், ஸ்ரீ வெள்ளையம்மன், ஸ்ரீ கருணாகர பெருமாள் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

இந்த கோவிலில் ஸ்ரீ விநாயகர் முதல் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் வரை பரிவாரங்களுடன் கூடிய ஸ்ரீ பங்கசாட்சி உடனமர் ஸ்ரீ காடேஸ்வரப் பெருமான், காக்கும் கடவுளாக விளங்கும் ஸ்ரீ கருணாகர பெருமாள், ஸ்ரீ வெள்ளையம்மன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.



கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைத்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. புனித நீர் கலசங்களுக்கும் சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிம்ம லக்கனத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் ஆன்மிகவாதிகள், பக்தர்கள், பொதுமக்கள் என பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். அனைவரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பங்கசாட்சி அம்பிகை, ஸ்ரீ காடையீஸ்வரர், ஸ்ரீ வெள்ளையம்மன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகர பெருமாளின் அருளைப் பெற்றனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கோவில் விழா கமிட்டியின் மூலம் உணவு வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை காங்கேயம் காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன், காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்காவல்படையினர் மேற்கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...