பொள்ளாச்சி அருகே கராச்சேரி மாகாளியம்மன் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி அருகே கராச்சேரியில் உள்ள பழமையான மாகாளியம்மன் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூன்று நாட்கள் சிறப்பு யாகங்கள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கராச்சேரியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த விநாயகர், பாலமுருகன், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 8-ஆம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா, மூன்று நாட்கள் பல்வேறு சிறப்பு யாகங்கள் மற்றும் ஹோமங்களுடன் தொடர்ந்தது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வில், சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னர், புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் தங்கள் தலையில் சுமந்தபடி, மலர்கள் தூவப்பட்டு கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன.



கோபுரத்தின் உச்சியில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர், பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்த முக்கிய நிகழ்வில் பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார். மேலும், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று, இந்த புனித நிகழ்வை கண்டு வழிபட்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...