பொள்ளாச்சி அருகே கராச்சேரி மாகாளியம்மன் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி அருகே கராச்சேரியில் உள்ள பழமையான மாகாளியம்மன் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூன்று நாட்கள் சிறப்பு யாகங்கள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கராச்சேரியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த விநாயகர், பாலமுருகன், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 8-ஆம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா, மூன்று நாட்கள் பல்வேறு சிறப்பு யாகங்கள் மற்றும் ஹோமங்களுடன் தொடர்ந்தது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வில், சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னர், புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் தங்கள் தலையில் சுமந்தபடி, மலர்கள் தூவப்பட்டு கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன.



கோபுரத்தின் உச்சியில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர், பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்த முக்கிய நிகழ்வில் பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார். மேலும், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று, இந்த புனித நிகழ்வை கண்டு வழிபட்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...