கோவையில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்: அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்பு

கோவை 63வது வார்டில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை மாநகரின் 63வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் திமுகவின் "இல்லந்தோறும் இளைஞரணி" உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டார்.

இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் ராமநாதபுரம் பகுதி வார்டு எண் 63இல் உள்ள பெருமாள் கோயில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.தனபால், துணை அமைப்பாளர் லாராபிரேம்தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் பகுதி செயலாளர் ப.பசுபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 63வது வட்டக் கழகச் செயலாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். மேலும், பொதுக்குழு உறுப்பினர் வெ.ந.உதயகுமார், மு.மா.ச.முருகன், கோவை மாநகராட்சி பணிக்குழு தலைவர் சாந்தி முருகன் மற்றும் பல திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் திமுக கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. திமுக கழக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் "இல்லந்தோறும் இளைஞர் அணி" உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்த முகாம் கோவை மாநகர் மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்று வந்த "இல்லந்தோறும் இளைஞர் அணி" உறுப்பினர் சேர்க்கையின் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. இது கட்சியின் அடித்தள பலத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...