ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குடமுழுக்கு விழா தை மாதத்திற்குள் நடைபெறும்: பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா தை மாதத்திற்குள் நடைபெறும் என்று பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி தெரிவித்துள்ளார். கோயில் ராஜகோபுரத்தில் பாலாலய பூஜை நடைபெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வரும் தை மாதத்திற்குள் நடைபெறும் என்று பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி தெரிவித்துள்ளார். கோயில் ராஜகோபுரத்தில் பாலாலய பூஜை நடைபெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



ஆனைமலை மாசாணியம்மன் கோயில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

தமிழக முதலமைச்சர் சட்டசபையில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று கோயிலின் ராஜகோபுரம் முன் பகுதியில் பாலாலய பூஜை நடைபெற்றது.



இந்நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி, "தமிழகத்தில் இதுவரை 5000-க்கும் மேற்பட்ட கோயில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா தமிழக முதலமைச்சரால் நடத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் உலகப் புகழ்பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான ஆயத்தப் பணிகள் இன்று துவங்கியுள்ளன. வரும் தை மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும்," என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைவாணி சாந்தலிங்கம், ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி, யுவராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...