கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 19ம் தேதி சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். இம்முகாமில் பல்வேறு கல்வித் தகுதி கொண்டவர்கள் பங்கேற்கலாம்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் நடத்தப்படும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் குறித்த விவரங்களை தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும், அதன்படி வரும் 19ம் தேதி காலை 10:00 மணி முதல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நேரடியாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்களும் பங்கேற்கலாம். பங்கேற்பாளர்கள் தங்களது சுய விவரம் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை கொண்டு வர வேண்டும். இந்த முகாமில் பங்கேற்க வயது வரம்பு இல்லை என்பதோடு, அனுமதியும் இலவசமாகும்.

பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்று, பல்வேறு பணியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளன. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும். மேலும், பணி நியமனம் பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விருப்பமுள்ள மனுதாரர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விவரங்களுக்கு 0422 - 2642388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...