கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 19ம் தேதி சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். இம்முகாமில் பல்வேறு கல்வித் தகுதி கொண்டவர்கள் பங்கேற்கலாம்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் நடத்தப்படும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் குறித்த விவரங்களை தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும், அதன்படி வரும் 19ம் தேதி காலை 10:00 மணி முதல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நேரடியாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்களும் பங்கேற்கலாம். பங்கேற்பாளர்கள் தங்களது சுய விவரம் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை கொண்டு வர வேண்டும். இந்த முகாமில் பங்கேற்க வயது வரம்பு இல்லை என்பதோடு, அனுமதியும் இலவசமாகும்.

பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்று, பல்வேறு பணியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளன. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும். மேலும், பணி நியமனம் பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விருப்பமுள்ள மனுதாரர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விவரங்களுக்கு 0422 - 2642388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...