குறைந்தபட்ச ஊதியம் கோரி ஏஐடியுசி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவையில் ஏஐடியுசி சார்பில் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை சிவானந்தா காலனியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில செயலாளரும், வால்பாறை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான ஆறுமுகம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இப்போராட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.

கிராம உள்ளாட்சிகளில் மக்களின் அடிப்படை அத்தியாவசிய பணிகளில் கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என 2017-ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

முன்தேதியிட்டு நிலுவையிலுள்ள பணப்பலன்களை வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து, கோவை தொழிலாளர் கூடுதல் இணை ஆணையரிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்த மனுவில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டது. மனு அளித்த பின்னர் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...