குறைந்தபட்ச ஊதியம் கோரி ஏஐடியுசி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவையில் ஏஐடியுசி சார்பில் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை சிவானந்தா காலனியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில செயலாளரும், வால்பாறை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான ஆறுமுகம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இப்போராட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.

கிராம உள்ளாட்சிகளில் மக்களின் அடிப்படை அத்தியாவசிய பணிகளில் கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என 2017-ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

முன்தேதியிட்டு நிலுவையிலுள்ள பணப்பலன்களை வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து, கோவை தொழிலாளர் கூடுதல் இணை ஆணையரிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்த மனுவில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டது. மனு அளித்த பின்னர் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...