குறைந்தபட்ச ஊதியம் கோரி ஏஐடியுசி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவையில் ஏஐடியுசி சார்பில் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை சிவானந்தா காலனியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில செயலாளரும், வால்பாறை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான ஆறுமுகம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இப்போராட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.

கிராம உள்ளாட்சிகளில் மக்களின் அடிப்படை அத்தியாவசிய பணிகளில் கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என 2017-ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

முன்தேதியிட்டு நிலுவையிலுள்ள பணப்பலன்களை வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து, கோவை தொழிலாளர் கூடுதல் இணை ஆணையரிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்த மனுவில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டது. மனு அளித்த பின்னர் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...