கோவை ஆம்னி பேருந்து நிலையம் மேம்பாட்டுப் பணிகள் ஆகஸ்டில் நிறைவடையும்

கோவை காந்திபுரத்தில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படுகிறது. பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை: கோவை மாநகரில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றான காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில், வார்டு 48ல் ஜி.பி. சிக்னல் அருகே மேம்பாலப் பகுதியில் சுமார் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையம், தனியார் பேருந்துகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. அதிகரித்து வரும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை, பயணிகள் எண்ணிக்கை மற்றும் அவசிய உட்கட்டமைப்பு வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு, இந்த பேருந்து நிலையத்தை ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் தரமுயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இந்த மேம்பாட்டுப் பணிகளுக்கான பூமிபூஜை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதன் பின்னர், கடந்த சில மாதங்களாக பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த புனரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, வளாகத்திற்குள் மேற்கூரை, பேருந்துகள் நிறுத்தும் வசதி, கழிவறைகள், கடைகள், மழைநீர் வடிகால், பாலூட்டும் தாய்மார்களுக்கான அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

தினமும் சுமார் 1,500 முதல் 1,800 வரையிலான பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பயன்படுத்தும் வகையில் சிறந்த கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, இந்த கட்டுமானப் பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் என கோவை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் செப்டம்பர் மாதம் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய தகவல்களின்படி இந்த மேம்பாட்டுப் பணிகள் இன்னும் ஒன்றரை மாதத்தில், அதாவது ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்ததும், பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளுடன் கூடிய ஆம்னி பேருந்து நிலையம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...