கோவை ஆம்னி பேருந்து நிலையம் மேம்பாட்டுப் பணிகள் ஆகஸ்டில் நிறைவடையும்

கோவை காந்திபுரத்தில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படுகிறது. பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை: கோவை மாநகரில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றான காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில், வார்டு 48ல் ஜி.பி. சிக்னல் அருகே மேம்பாலப் பகுதியில் சுமார் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையம், தனியார் பேருந்துகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. அதிகரித்து வரும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை, பயணிகள் எண்ணிக்கை மற்றும் அவசிய உட்கட்டமைப்பு வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு, இந்த பேருந்து நிலையத்தை ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் தரமுயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இந்த மேம்பாட்டுப் பணிகளுக்கான பூமிபூஜை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதன் பின்னர், கடந்த சில மாதங்களாக பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த புனரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, வளாகத்திற்குள் மேற்கூரை, பேருந்துகள் நிறுத்தும் வசதி, கழிவறைகள், கடைகள், மழைநீர் வடிகால், பாலூட்டும் தாய்மார்களுக்கான அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

தினமும் சுமார் 1,500 முதல் 1,800 வரையிலான பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பயன்படுத்தும் வகையில் சிறந்த கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, இந்த கட்டுமானப் பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் என கோவை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் செப்டம்பர் மாதம் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய தகவல்களின்படி இந்த மேம்பாட்டுப் பணிகள் இன்னும் ஒன்றரை மாதத்தில், அதாவது ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்ததும், பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளுடன் கூடிய ஆம்னி பேருந்து நிலையம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...