கள்ளச்சாராய ஒழிப்பு: கோவையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் கள்ளுக்கடைகள் திறப்பு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் கள்ளச்சாராய மரணங்களைத் தடுக்க திமுக அரசு முன் வர வேண்டும் எனவும், கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 9) நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் மாநில பொதுச் செயலாளர் கே.சி. ராஜா தலைமையிலும், கோவை மண்டல தலைவர் சுதர்சன் முன்னிலையிலும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டக்காரர்கள், கள்ளச்சாராயத்தால் தமிழ்நாட்டில் பல உயிர்கள் பறிபோய்விட்டதாகவும், கள்ளச்சாராயம் குடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து அவர்களைத் திருத்த வேண்டும் எனவும், மதுவுக்கு அடிமையாக இருப்பவர்களைப் பாடம் எடுத்து முழுமையாக சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் நடைபெற்றது. அதே நேரத்தில், கள்ளுக்கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...