கள்ளச்சாராய ஒழிப்பு: கோவையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் கள்ளுக்கடைகள் திறப்பு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் கள்ளச்சாராய மரணங்களைத் தடுக்க திமுக அரசு முன் வர வேண்டும் எனவும், கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 9) நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் மாநில பொதுச் செயலாளர் கே.சி. ராஜா தலைமையிலும், கோவை மண்டல தலைவர் சுதர்சன் முன்னிலையிலும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டக்காரர்கள், கள்ளச்சாராயத்தால் தமிழ்நாட்டில் பல உயிர்கள் பறிபோய்விட்டதாகவும், கள்ளச்சாராயம் குடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து அவர்களைத் திருத்த வேண்டும் எனவும், மதுவுக்கு அடிமையாக இருப்பவர்களைப் பாடம் எடுத்து முழுமையாக சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் நடைபெற்றது. அதே நேரத்தில், கள்ளுக்கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...