கள்ளச்சாராய ஒழிப்பு: கோவையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் கள்ளுக்கடைகள் திறப்பு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் கள்ளச்சாராய மரணங்களைத் தடுக்க திமுக அரசு முன் வர வேண்டும் எனவும், கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 9) நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் மாநில பொதுச் செயலாளர் கே.சி. ராஜா தலைமையிலும், கோவை மண்டல தலைவர் சுதர்சன் முன்னிலையிலும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டக்காரர்கள், கள்ளச்சாராயத்தால் தமிழ்நாட்டில் பல உயிர்கள் பறிபோய்விட்டதாகவும், கள்ளச்சாராயம் குடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து அவர்களைத் திருத்த வேண்டும் எனவும், மதுவுக்கு அடிமையாக இருப்பவர்களைப் பாடம் எடுத்து முழுமையாக சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் நடைபெற்றது. அதே நேரத்தில், கள்ளுக்கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...