கள்ளச்சாராய ஒழிப்பு: கோவையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் கள்ளுக்கடைகள் திறப்பு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் கள்ளச்சாராய மரணங்களைத் தடுக்க திமுக அரசு முன் வர வேண்டும் எனவும், கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 9) நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் மாநில பொதுச் செயலாளர் கே.சி. ராஜா தலைமையிலும், கோவை மண்டல தலைவர் சுதர்சன் முன்னிலையிலும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டக்காரர்கள், கள்ளச்சாராயத்தால் தமிழ்நாட்டில் பல உயிர்கள் பறிபோய்விட்டதாகவும், கள்ளச்சாராயம் குடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து அவர்களைத் திருத்த வேண்டும் எனவும், மதுவுக்கு அடிமையாக இருப்பவர்களைப் பாடம் எடுத்து முழுமையாக சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் நடைபெற்றது. அதே நேரத்தில், கள்ளுக்கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...