உடுமலை அருகே சாலை அமைப்பதில் முறைகேடு: அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்

உடுமலை அருகே சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் சாலை அமைப்பதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு. கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு சாலை அமைக்க 21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுகவைச் சேர்ந்த போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் அதிகாரிகள் முறைகேடாக அருகில் உள்ள தனியார் மனைப்பிரிவுக்கு நிதியை ஒதுக்கி சாலை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கும் புகார் அளித்தனர். தவறு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட அதிகாரிகள் சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, சாலை அமைப்பதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பொதுமக்கள் கூறுகையில், "கடந்த இரண்டு வருடமாக சாலை அமைப்பதில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இனியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்," என்றனர்.

உடுமலை அருகே சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் சாலை அமைப்பதில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இச்சம்பவம் உடுமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...