உடுமலை அருகே சாலை அமைப்பதில் முறைகேடு: அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்

உடுமலை அருகே சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் சாலை அமைப்பதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு. கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு சாலை அமைக்க 21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுகவைச் சேர்ந்த போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் அதிகாரிகள் முறைகேடாக அருகில் உள்ள தனியார் மனைப்பிரிவுக்கு நிதியை ஒதுக்கி சாலை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கும் புகார் அளித்தனர். தவறு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட அதிகாரிகள் சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, சாலை அமைப்பதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பொதுமக்கள் கூறுகையில், "கடந்த இரண்டு வருடமாக சாலை அமைப்பதில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இனியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்," என்றனர்.

உடுமலை அருகே சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் சாலை அமைப்பதில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இச்சம்பவம் உடுமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...